Wednesday, February 9, 2011

பெண்கள் மனம் பற்றி..

எதிர்பார்க்கும் பெண்ணின்   மனம்  
ஆண்களின் மனம் புரியாமல்  பேசும் ஒரு அழகிய  பிம்பம்!
ஆண்டவனையும் அது அந்தமானுக்கு  அனுப்பும்  சக்தி  உடையது!
குறைகளை மட்டும்  சொல்லும்  ஒரு குழந்தைத்தனம்  அது!
பிரிவை விரும்பா ஒரு பிள்ளை கனி அது!
சொல்வதை  ஏற்றுக்கொள்ளாமல் தான்சொல்வதுதான் சரி என  நிற்கும் ஒரு அரை நிறை குடம் அது!
அழகு இருக்கும் இடத்தில தான் ஆபத்து இருக்கும் என சொல்வார்கள். இது காதலில் விழுந்தவர்கள் மட்டும் அறிவர்!
மனம்  ஒரு குரங்கு என சொன்னவன் “பெண்ணின்“ என்ற வார்த்தையை மறந்து விட்டான்.  
பாவம். அதை சொல்வதில் கூட அவனுக்கு எவளவு  பயம்!! அதனால் தான் விட்டு விட்டான்,
நான் ஒன்றும் பெண்களின் எதிரி அல்ல. படிப்பவர்கள் மனம் எரிந்தால், அடுத்த முறை பெண்களின் புகழை  போற்றி எரிந்த  மனதில் பாலூற்றுகிறேன்,,,    

------------------- கொஞ்சம் வாய் அதிகம் பேசும் குழந்தை

24 comments:

  1. //கொஞ்சம் வாய் அதிகம் பேசும் குழந்தை ///
    ஹா..ஹா.. அப்படித்தான் தெரிகிறது!:-))
    ஆனால் மாட்டிக்கப் போகுது குழந்தை. ஜாக்கிரதை:-)))

    ReplyDelete
  2. //கொஞ்சம் வாய் அதிகம் பேசும் குழந்தை //

    வாயுள்ள புள்ளை தான் பிழைக்கும்...

    ReplyDelete
  3. கொஞ்சம் வாய் அதிகம் பேசும் குழந்தை

    //

    தெரியுது.. தெரியுது..

    ReplyDelete
  4. //சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல் தான்சொல்வதுதான் சரி என நிற்கும் ஒரு அரை நிறை குடம் அது!//

    அரை நிறை குடம் ..இது புதுசா இருக்கே ..

    //பாவம். அதை சொல்வதில் கூட அவனுக்கு எவளவு பயம்!! அதனால் தான் விட்டு விட்டான்,//

    ஹி ஹி ஹி .. எனக்கும் வம்பு வேண்டாம் ..நான் கிளம்புறேன் ..

    ReplyDelete
  5. உங்க பதிவு நல்லாத்தான் இருக்குங்க ..

    ReplyDelete
  6. அடுத்த முறை பெண்களின் புகழை போற்றி எரிந்த மனதில் பாலூற்றுகிறேன்,,, //

    அடபாவி உங்க பதிவை படிக்கவந்தா பால் ஊத்துவீங்க்களா?

    ReplyDelete
  7. உங்க பதிவு சூப்பரா இருக்கு மக்கா......

    ReplyDelete
  8. //ஆண்களின் மனம் புரியாமல் பேசும் ஒரு அழகிய பிம்பம்!//


    கொப்புரானே இது பயங்கர ஆபத்தாச்சே.....

    ReplyDelete
  9. //ஆண்டவனையும் அது அந்தமானுக்கு அனுப்பும் சக்தி உடையது//

    குழந்தை பேசற பேச்ச பாருய்யா....

    //நான் ஒன்றும் பெண்களின் எதிரி அல்ல. படிப்பவர்கள் மனம் எரிந்தால், அடுத்த முறை பெண்களின் புகழை போற்றி எரிந்த மனதில் பாலூற்றுகிறேன்//

    //கொஞ்சம் வாய் அதிகம் பேசும் குழந்தை//

    உண்மை தான் போலிருக்கிறது....

    ReplyDelete
  10. முதல் பதிவே பெண்களைப் பற்றிய விமர்சனமா?????

    //ஆண்டவனையும் அது அந்தமானுக்கு அனுப்பும் சக்தி உடையது!//

    அந்தமான் என்பது அழகான தீவு தானே???? அங்கயும் மக்கள் வாழுறாங்க.. எல்லா வசதியும் இருக்கும் இடம் தான். இது நல்ல விசயம் தானுங்களே..

    ReplyDelete
  11. //குறைகளை மட்டும் சொல்லும் ஒரு குழந்தைத்தனம் அது!//


    அதான் குறைகள்னு தெரியுதுல...
    குறைகளை எடுத்துச்சொல்லி உங்கள திருத்துறது தப்பா??? இதிலென்ன குழந்தைத் தனம் இருக்கு?

    ReplyDelete
  12. //அடுத்த முறை பெண்களின் புகழை போற்றி எரிந்த மனதில் பாலூற்றுகிறேன்//

    கடைசி வார்த்தை நீர் ஊற்றுகிறேன் என்றிருந்தால் நன்றாக இருக்குமே!!

    ReplyDelete
  13. //சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல் தான்சொல்வதுதான் சரி என நிற்கும் ஒரு அரை நிறை குடம் அது! //


    யார்கிட்டயோ வசமா மாட்டிகிட்டீங்க போலயே...

    ReplyDelete
  14. //மனம் ஒரு குரங்கு என சொன்னவன் “பெண்ணின்“ என்ற வார்த்தையை மறந்து விட்டான். //


    பெண்ணின் மனது ஒரு குரங்கா????
    எதை வச்சு அப்டி சொல்றீங்க???? சில பெண்களை வைத்து, ஒட்டு மொத்தமாக இப்படி சொல்லக் கூடாது குழந்த...

    ReplyDelete
  15. //நான் ஒன்றும் பெண்களின் எதிரி அல்ல. படிப்பவர்கள் மனம் எரிந்தால், அடுத்த முறை பெண்களின் புகழை போற்றி எரிந்த மனதில் பாலூற்றுகிறேன்//


    ம்ம் அந்த பயம் இருக்கட்டும்.
    (நல்லா எஸ்கேப் ஆகுறீங்க... )

    ReplyDelete
  16. //கொஞ்சம் வாய் அதிகம் பேசும் குழந்தை//


    ரொம்ப ஜாஸ்தியாகவே பேசும் போலவே இந்த குழந்தை..

    இருந்தாலும் பதிவு உண்மை தான்
    வாழ்த்துக்கள் குழந்தை.......

    ReplyDelete
  17. //கொஞ்சம் வாய் அதிகம் பேசும் குழந்தை //


    உண்மை.. கொஞ்சம் இல்ல நிறையவே வாய் அதிகம் தான்.

    ReplyDelete
  18. கொஞ்சம் அதிகமா பேசுற மாதிரிதான் இருக்கு... ம்ம்ம்...

    ReplyDelete
  19. //இது காதலில் விழுந்தவர்கள் மட்டும் அறிவர்//


    கலி முத்திடுத்து, மழலையெல்லாம் லவ் பண்ணி பிலாசிபை பேசுதுடா சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

    ReplyDelete
  20. இது மழலை பேச்சு இல்லீங்கோ .. விவகாரமான பேச்சு.. பெண்ணிய வாதிகள் சண்டைக்கு வரமால் இருந்தால் சரி

    ReplyDelete
  21. bosssuuu...

    semma kalakkal..
    nadathunga nadathunga.

    ReplyDelete
  22. அனைத்து வலை உலக மக்களுக்கும் இந்த குழந்தையை வாழ்த்திய பாராட்டிய அணைத்து உள்ளங்களுக்கும் நன்றியும் , காதலர்தினம் வாழ்த்துக்களும் சொல்லிக் கொள்கிறான்,,,,,,

    இவன்

    உங்கள் அன்பு மழலை......

    ReplyDelete
  23. அனைத்து வலை உலக மக்களுக்கும் இந்த குழந்தையை வாழ்த்திய பாராட்டிய அணைத்து உள்ளங்களுக்கும் நன்றியும் , காதலர்தினம் வாழ்த்துக்களும் சொல்லிக் கொள்கிறான்,,,,,,

    இவன்

    உங்கள் அன்பு மழலை......

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்